ஜெத்தா தமிழ்ச் சங்கம் வழங்கும் சென்னை செங்கடல் சங்கமம்
ஜெத்தா: சவுதி அரேபியாவின் செங்கடல் நகராம் ஜெத்தாவில் ஜெத்தா தமிழ் சங்கத்தின் சார்பில் சென்னை செங்கடல் சங்கமம் 2010 எனும் சிறப்பு நிகழ்ச்சி 29.04.2010 வியாழன் மாலை ஆறு மணிக்கு டிரியோ ராஞ்ச் ஈகுஸ்டிரியன் கிளப்பில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் சென்னை காயிதேமில்லத் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை தலைவரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான முனைவர் சேமுமு. முஹம்மதலி, திருச்சி எம்.ஐ.இ.டி. கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் பீ.மு.மன்சூர், முன்னணி நடிகர் ஷாம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் மாபெரும் தமிழ் கலை இலக்கிய விழா மற்றும் சிறுவர், சிறுமியர் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல இடம் பெறுகின்றன.
மேலும் தொடர்புக்கு [email protected] என்ற இமெயில் முகவரியை அணுகி அறியலாம்.












Click it and Unblock the Notifications