உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கரூரில் 5000 திருக்குறள் புத்தகம் இலவச விநியோகம்
Subscribe to Oneindia Tamil

கரூர் மாவட்ட திருக்குறள் பேரவை கடந்த பல வருடங்களாக திருக்குறள் புத்தகத்தை பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள், குடிமக்கள், சமூக சான்றோர்கள், பெண்கள் என சகல தரப்பினருக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கரூரில் இலவச திருக்குறள் புத்தகத்தை பொது மக்களுக்கு வழங்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து, கரூர் பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் கரூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி இலவச திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இதனை கரூர் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.பி. கனகராஜ் பெற்றுக் கொண்டார்.
மேலும், கரூர் பஸ் நிலையத்தில் இருந்த பல்வேறு ஊர் மக்களிடம் இலவச புத்தகத்தை திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் வங்கினார்.
இந்த சேவைக்கு கரூர் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.












Click it and Unblock the Notifications