திண்டுக்கல் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோவிலில் பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஊத்துப்பட்டியில் உள்ளது சென்னப்பன் கருப்பணசாமி கோவில்.
இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மிக பிரமாண்டமாக திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த வருடமும், திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக அமர்ந்திருந்தனர்.
அப்போது, பக்தர்கள் தலையில் கோவில் பூசாரி, தேங்காயை வரிசையாக உடைத்துக் கொண்டே சென்றார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என்று கோஷம் எழுப்பினர்.
பின்னர் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி முடிந்த பின்பு சாமிக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டி கும்பிட்டனர்.












Click it and Unblock the Notifications