ஒண்டிவீரனுக்கு மணி மண்டபம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில்,
'தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் வரவேற்கிறோம். ஆனால், அதே தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் சுதந்திரப் போராட்ட வீரர்களான வாஞ்சிநாதன், கோபால் நாயக்கர் போன்றவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி இருக்க, ஒண்டிவீரனை மட்டும் புறக்கணிப்பது சரியல்ல. எனவே, ஒண்டிவீரனுக்கும் மணிமண்டபம் அமைக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications