வெயில்: ராஞ்சியில் காலை 6.30 மணிக்கே திறக்கும் பள்ளிகள்!
ராஞ்சி: வெயில் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கத்தரி வெயில் தொடங்கும் முன்பே நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது.
குளிர் பிரதேசங்களிலும் கூட இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை சற்று கூடுதலாக நிலவுகிறது.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஒரிசாவில் மட்டும் 28 பலியாகி உள்ளனர். மேலும் வெபப்பகால நோய்களுக்கு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு விவசாயம், சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றின் வேலை நேரத்தை அம்மாநில அரசு மாற்றி அமைத்தது.
இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பள்ளி நேரத்தை மாற்றியமைத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோடைக்கு முன்பே வெயில் கொளுத்துவதால், கோடை விடுமுறை துவங்கும் வரை பள்ளிகள் இனி காலை 6.30க்கே துவங்கிவிடும் என ராஞ்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வழக்கமாக மதியம் 2.30 மணிக்கு முடிவடைவதற்கு பதிலாக, முன்னதாகவே 11 மணிக்கெல்லாம் வகுப்புகளை முடித்துக்கொண்டு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications