மதுரை தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கமாக விரிவடைந்தது
மதுரை: மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில், கடந்த ஜூன் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. அதில், செம்மொழித் தமிழின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் பல செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சங்கம் வளர்த்த மதுரையில் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கான இடத்தை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், மதுரை மாவட்ட கலெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே மதுரையில், பாண்டித்துரை தேவரால், நான்காம் தமிழ்ச் சங்கம் உருகவாக்கப்பட்டு தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications