துபாய் தமிழ்ச் சங்க மே தின விழா
துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்தினை சந்திரா கீதா கிருஷ்ணன் குழுவினர் பாடினர். விழாக் குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருக்குறளைப் படித்து அதன் விளக்கவுரையினை நேஹா மற்றும் ஸ்ரிஷ் ஆகியோர் நிகழ்த்தினர். நேஹா, லோஹிதா, பதமஸ்ரீ, ஜனனி மற்றும் வரதா ஆகியோர் வரவேற்பு நடனம் ஆடினர்.
வருடாந்திர ஆண்டறிக்கையினை பொதுச்செயலாளர் ஜெகநாதன் வாசித்தார். வரவு செலவு அறிக்கையினை பொருளாளர் கீதா கிருஷ்ணன் மற்றும் துணைப் பொருளாளர் சுந்தார் ஆகியோர் வாசித்தனர்.
ஸ்ரேயஸ் வயலின் வாசித்தார். மேதினம் குறித்த உரையினை ரோஷினி மற்றும் மணீஷ் ஆகியோர் நிகழ்த்தினர். கோபிகா, காவ்யா மற்றும் ஜன்னி ஆகியோர் நடனம் ஆடினர்.
பாலாஜி மற்றும் கோகுல் ஆகியோர் வினாடி வினா போட்டியினை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஆறுமுகம், கிரிவாசன், ராமன், ராஜாராம் உள்ளிட்ட பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
துணைப்பொருளாளர் சுந்தர் நன்றி கூறினார். தேசிய கீத்த்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியினை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













Click it and Unblock the Notifications