மே 15 - நாகூரில் கந்தூரி விழா கொடியேற்றம்
நாகூர்: நாகூர் தர்கா கந்தூரி விழா வரும் 15 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
நாகை மாவட்டம், நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவில் 453 ம் ஆண்டு கந்தூரி விழா மே 15 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
பாதுஷா நாயகம் மினவராவில் ஏற்றப்படும் கொடி ஒவ்வொரு வருடமும் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும். அங்கிருந்து நாகைக்கு வரும்.
கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாக புறப்பட்டு நாகூருக்கு வந்த பின் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கும்.
பாதுஷா நாயகம் மினவராவில் ஏற்றுவதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கொடி நேற்று காலை சென்னை வந்தது.
அங்கிருந்து கார் மூலம் நாகை செம்மாரக்கடை தெருவில் உள்ள வாப்பாக்கண்ணு என்பவர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கொடியை யானை மீது ஏற்றி முஸ்லிம் ஜமாத்தார்கள் ஊர்வலமாக, அமீது சுல்தான் வீட்டிற்கு எடுத்து சென்றனர்.
அங்கு தொடர்ந்து பாத்தியா ஓதப்பட்டு மே 15 ம் தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக நாகூர் தர்காவிற்கு சென்று கொடி ஏற்றப்பட உள்ளது.











Click it and Unblock the Notifications