நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் அழகிய நீருற்று

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை,வண்ணார்பேட்டை புதிய மேம்பாலம் ஜூலையில் திறக்கப்படுகிறது. மேலும் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலை வைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கண்ணை கவரும் அழகிய நீருற்றுகள் அமைக்கப்பட உள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 15 கோடியோ 80 லட்சம் செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த பணி துவங்கியது. மேம்பால பணிக்காக வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் இருந்த செல்லபாண்டியன் சிலை அகற்றும் பணி நேற்று துவங்கியது. பின்னர் அந்த சிலை டிராக்டர் மூலம் பாளையங்கோட்டையில் உள்ள அருட்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

பாலம் வேலை முடிந்ததும் ரவுண்டானா அருகே கண்ணை கவரும் வகையில் செயற்கை நீறுற்றுடன் பூங்கா அமைக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் செல்லபாண்டியன் சிலை வைக்கப்படுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அனந்தசயனம் கூறும்போது வண்ணார்பேட்டை மேம்பால பணி வரும் ஜூலை மாதத்தில் நிறைவடையும். செல்லபாண்டியன் சிலை வைக்கப்படும்

ரவுண்டானாவில் அழகிய நீறுற்றுகள் அமைக்கப்படும். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். சர்வீஸ் ரோடுகளும் சீரமைக்கப்பட்டு தண்ணீர் தேங்காதவாறு வடிகால்கள் அமைக்கப்படும். வாகனங்களை ஓன்றை ஒன்று முந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சாலையோரம் கற்கள் நடப்பட்டு அதற்கு வர்ணம் பூசப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+