சனி கிரக நிலவில் ஏராளமாய் ஆக்ஸிஜன், தண்ணீர்! - நாசா
அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா சனி கிரகத்துக்கு காசினி விண்வெளி ஓடத்தை கடந்த 2004-ம் ஆண்டு அனுப்பியது.
அந்த ஓடம் சனி கிரகத்தைச் சுற்றி பறந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சனி கிரகத்தின் அருகேயுள்ள ரியா விண்வெளிப் பாதையில் ஆக்ஸிஜன் இருப்பது தெரிய வந்துள்ளது. இப்பாதையில் காந்த சக்தி உள்ளது. அது தான் ஆக்சிஜனை தாங்கிப் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரியாவில் உறைந்த நிலையில் ஆக்ஸிஜன் உள்ளது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவை ஐஸ் கட்டிகளில் மூலக்கூறுகளாக உள்ளன என்றும், இதனால் சனி கிரகத்தை சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் உறைந்த நிலையிலேயே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல கார்பன்டை ஆக்சைடும் இந்த நிலவில் கணிசமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமி தவிர பிற கிரகங்களில் ஆக்ஸிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே வியாழனின் துணைக் கிரகங்களான யூரோபா, கனிமீட் ஆகியவற்றிலும் ஏராளமாய் ஆக்ஸிஜன் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைவிட, அதிகமாக, உறைந்த நிலையில் ரியாவில் ஆக்ஸிஜன் உள்ளதுதான் விசேஷம்.
இன்னொன்று ரியா ஒரு இயற்கையான கிரகமாக உள்ளது. இங்கு ஈர்ப்பு சக்தி இயல்பாக உள்ளதாகவும், உறைந்த நிலையில் ஏராளமாய் தண்ணீர் இருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.