புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
புதுச்சேரி: புதுச்சேரியில் மே 16ம் தேதி தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது.
புதுச்சேரி பாரதி பூங்காஅருகில் உள்ள வணிக அவையில் காலை 9.45 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
நிகழ்ச்சியில் தமிழறிஞர் புலவர். இரா.இளங்குமரனார், உலகத் தகவல் தொழில் நுட்ப மைய பொதுக்குழு உறுப்பினர், இராம.கி, கனடா வாட்டர் லூ பல்கலைக்கழகம், மின்னணு மற்றும் கணிப்பொறி பொறியியல்துறை பேராசிரியர் செல்வக்குமார், சவூதி அரேபியாவின் நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை), சென்னை பொறியாளர் மணி மு.மணிவண்ணன், முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை), பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி,பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி, சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை), தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை, நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி, புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி, சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி,.தமிழ் நம்பி, விழுப்புரம், பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி, விருபா. குமரேசன் சென்னை, எழில் இளங்கோ விழுப்புரம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications