For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐந்தருவி தோட்டக் கலை பண்ணையில் ரூ. 5.5. கோடியில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டல்

Google Oneindia Tamil News

குற்றாலம்: குற்றாலம் ஐந்தருவியில் அமைந்துள்ள தோட்டக்கலை பண்ணையில் ரூ.5.5 கோடி செலவில் பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான குற்றாலம் ஐந்தருவியில், ரூ.5.5 கோடி செலவில் அருவிப் பூங்கா மற்றும் கொடைக்கானல் பூங்கா மேம்பாட்டு பணிகளின் அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை 10 மணிக்கு வேளாண்மைத் துறை செயலர் இராம மோகனராவ் தலைமையில் நடைபெற்றது.

குற்றாலம் அருவிப் பூங்காவிற்கான அடிக்கல்லை நாட்டி வேளாண்மைதுறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கொடைக்கானல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி வருவாய்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அமைச்சர் பூங்கோதை, மைதீன்கான், நெல்லை மேயர் ஏ.எல். சு்ப்பிரமணியன், எம்.பி.க்கள் லிங்கம், சித்தன், தங்கவேலு, மனோஜ் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இங்கு பூங்கா, நீர்விழ்ச்சிகள், தாழ்தள தோட்டம், காகிதப்பூ தோட்டம், இயற்கை பூங்கா உள்பட 23 வகையானவை அமைக்கப்பட உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X