முதியோர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் சரோஜினி வரதப்பன்
சென்னை: முதியோர் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக சமூக சேவகி சரோஜினி வரதப்பன், முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் உள்பட 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதியோர்களுக்கான கொள்கையை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தும்போது மாநில அளவில் உயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் முதியோர் நலனுக்கான உயர்நிலை ஆலோசனைக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இதில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முதியோர் மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன், சமூக சேவகர்களான சரோஜினி வரதப்பன், இந்திராணி ராஜதுரை, கே.எஸ்.மரியசூசை, சிவ.சோமநாதன், பார்கவி தேவேந்திரா, கருணாகரன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி முதியோர்களுக்கான மாநில கொள்கையை நடைமுறைப்படுத்துவதை மறு ஆய்வு செய்யும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications