ஹரியானா பல்கலைக்கழகத்தில் 'சதி' கோயில்!

Subscribe to Oneindia Tamil

Sathi
ஹிஸ்ஸார்: ஹரியானா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள, உடன்கட்டை ஏறுவதை ஆதரிக்கும் 'சதி கோயிலை' பொதுமக்கள் வழிபடத் துவங்கினர்.

கணவன் இறந்ததும், அவனது எரியும் சிதையில் மனைவியும் விழுந்து எரிந்து உயிரை விடுவதுதான் உடன்கட்டை ஏறும் பழக்கம் அல்லது சதி எனப்படுகிறது.

நாடு விடுதலையாவதற்கு முன்புவரை இந்த மோசமான பழக்கம் வட இந்தியாவில் தலை விரித்தாடியது. ஆனால் ராஜாராம் மோகன் ராய், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் இந்த கொடிய பழக்கத்தை அடியோடு ஒழித்தனர்.

ஆனால் இந்த நவீன காலத்திலும் எப்போதாவது ஒரு முறை இந்த உடன்கட்டை ஏறும் நிகழ்ச்சி வடக்கில் நடந்து வருகிறது.

கணவனுடன் மனைவியும் நேராக சொர்க்கத்துக்கே போவார்கள் என்ற நம்பிக்கை காரணமாக இதனை துணிந்து செய்கின்றனர் சிலர்.

இந்தச் செயல் ஒரு சமூக விரோத, சட்ட விரோத நிகழ்ச்சியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சதியைப் போற்றும் வகையில் ஹரியானாவில் உள்ள சவுத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண்மைக் கல்லூரி வளாகத்துக்குள் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

கணவனுடன் உடன்கட்டை ஏறிய ஒரு மனைவியைப் போற்றும் வகையில், இந்தக் கோயில் பத்தாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்து. இந்த கோயிலை உள்ளடக்கிய இடத்தில்தான் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. எனவே கோயிலை அமைத்தவர்கள் வழிபடும் உரிமை கோர, பல்கலைக் கழகமும் இதனை கடிதம் பெற்றுக் கொண்டு வழிபட அனுமதித்துள்ளது.

இப்போது, இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் பொதுமக்கள் வந்து வழிபடவும் ஆரம்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+