சிங்கப்பூரில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

- முனைவர் மு. இளங்கோவன்

சிங்கப்பூரில் இன்று மாலை வலைப்பதிவர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.

சிங்கப்பூருக்கு 15.05.2010 காலை 7.40 மணியளவில் ஏர் இந்தியா வானூர்தியில் வந்து சேர்ந்தேன். நண்பர் குழலி, கோவி.கண்ணன் ஆகியோர் வானூர்தி நிலையம் வந்து வரவேற்றனர். இதற்கு முன் இணையம் வழியாகவே அறிந்திருந்தோம். நேரில் பார்த்து மகிழ்ந்தோம். உடனடியாக நாளை வலைப்பதிவர்கள் சந்திப்பு ஒன்று நிகழ்த்த ஏற்பாடு செய்வதாக முடிவு செய்தோம்.

நான் வேறொரு கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரை படைப்பதால் இன்று 16.05.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திக்க உள்ளோம். நண்பர் இரத்தின. புகழேந்தியும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன். அதன் பிறகு இலக்கியக் கலந்துரையடல் ஒன்று தமிழ் அன்பரும் பாவாணர் அறக்கட்டளையின் நிறுவனருமான ஐயா கோவலங்கண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நடக்க உள்ளது.

இடம்: பாவாணர் அரங்கம், மருதப்பர் உணவகம், 42, கேம்பல் லேன்,சிங்கப்பூர்
நாள்: 16.05.2010
நேரம்:மாலை 5.00 மணி
தொடர்புக்கு: 90405974 திரு.கோவலங்கண்ணன்(சிங்கப்பூர்)

நன்றி: http://muelangovan.blogspot.com

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+