For Daily Alerts
Just In
வெள்ளித்திரைக்கா..சின்னத்திரைக்கா..அச்சுத் துறைக்கா?
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று சிறப்புப் பட்டிமன்றம் நடக்கிறது. இதற்கு பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமை தாங்குகிறார். இதில் இயக்குநர் பாரதிராஜா பேசுகிறார்.
இந்தப் பட்டிமன்றத்துக்கு, "தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு, வெள்ளித்திரைக்கே!
சின்னத்திரைக்கே! அச்சுத்துறைக்கே! என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதல்வர் வைத்திலிங்கம் தொடக்கவுரையாற்றுகிறார்.
வெள்ளித்திரைக்கே! எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, வாகை. சந்திரசேகர் ஆகியோர் பேசுகிறார்கள்.
சின்னத்திரைக்கே! எனும் தலைப்பில் ஐ. லியோனி, நடிகர் எஸ்.வி. சேகர் ஆகியோரும், அச்சுத்துறைக்கே! என்ற தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன், நக்கீரன் ஆர். கோபால் ஆகியோரும் பேசுகிறார்கள்.
Comments
கோவை செம்மொழி மாநாடு உலகத் தமிழ் மாநாடு சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பாரதிராஜா coimbatore tamil meet pattimandram bharathiraja
Story first published: Saturday, June 26, 2010, 15:10 [IST]