தமிழக அரசு முத்திரையை மாற்றும் எண்ணமில்லை - அமைச்சர் ஐ. பெரியசாமி
Subscribe to Oneindia Tamil
பழநி: தமிழக அரசு முத்திரையாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தை மாற்றும் எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை என அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி கூறினார்.
தமிழகத்தில் புகழ் பெற்ற முருகன் சன்னதியான பழநியில் 2 வது ரோப்கார் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா துவக்க விழா நடந்தது.
இந்த விழாவில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழக அரசு சின்னத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ராஜகோபுரத்தை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை.
பழநி வரும் பக்தர்களுக்கு பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்காக தனியார் நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாது.
பக்தர்களுக்கு நகராட்சியே எல்லா வசதிகளும் செய்துதர முடியாது. மலைக்கோயில் நிர்வாகம் சார்பில் கூடுதல் நிதி தர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications