ஊட்டியில் மலர்க் கண்காட்சி முடிந்தது -வெலிங்ட்ன் மையத்துக்குப் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: மலைகளின் ராணி ஊட்டியில் நடந்து வந்த மலர்க் கண்காட்சி இன்றுடன் முடிவடைந்தது.
கோடை சுற்றுலா களை கட்டியுள்ளது. ஊட்டியிலும் விறுவிறு சீசன் சூடு பிடித்துள்ளது.
இதையடுத்து அங்கு 2 நாட்களாக மலர்க் கண்காட்சி நடைபெற்று வந்தது. பல்வேறு விதமான மலர்கள், மலர்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் இடம் பெற்றிருந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கு இது கண்ணுக்கு விருந்தளிப்பதாக அமைந்தது.
இந்த நிலையில், இன்று மலர்க் கண்காட்சி நிறைவு பெற்றது. இதில், சிறந்த பூங்காவுக்கான கவர்னர் கோப்பை மற்றும் மலருக்கான முதல்வர் கோப்பை ஆகியவற்றை வெலிங்டன் ராணுவ மையப் பூங்கா வென்றது.












Click it and Unblock the Notifications