பெரியகோவில் 1000மாவது ஆண்டு விழா-தஞ்சையை மேம்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கீடு

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாமன்னர் ராஜராஜனின் தஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடிடும் வகையில், தமிழக அரசின் சார்பில், தஞ்சையில் செப்டம்பர் திங்கள் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு விழா நடத்தப்படும் என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்துள்ளார்.
இதையொட்டி, தஞ்சை நகரில் சாலைகள் மேம்பாடு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் மேம்பாடு, பெரியகோயில் முதல் மருத்துவக் கல்லூரி வரை தெருவிளக்குகள், நவீன சுகாதார வளாகங்கள், இராஜராஜசோழன் சிலை நிறுவப்பட்டுள்ள பூங்காவை அழகுபடுத்துதல், பெயர்ப் பலகைகள் மற்றும் தகவல் பலகைகள் அமைத்தல்,
சாமந்தான்குளத்தினை மேம்படுத்துதல், பெரியகோயில் அருகிலுள்ள ஜி.ஏ.கால்வாயின் பாலத்தை அகலப்படுத்தல் ஆகிய அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதற்காக 25 கோடியே 19 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி முதலமைச்சர் இன்று (13.8.2010) உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications