தஞ்சை பெரியகோயில: சிறப்பு நாணயம் வெளியிட அரசு முடிவு!
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதும், தனித்தன்மை மிகுந்த திராவிடக் கட்டடக்கலை அம்சங்கள் நிறைந்ததும், யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரிய நினைவுச்சின்னம் என அறிவிக்கப்பட்டு இருப்பது தஞ்சைப் பெரிய கோயில்.
இன்னும் ஏராளமான சிறப்புகள் கொண்ட தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு, 1000 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மத்திய அரசு சிறப்பு நாணயம் வெளியிட வேண்டுமென்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தஞ்சை பெரிய கோயிலின் உயர் தனிச்சிறப்பு மற்றும் இணையற்ற கட்டடக்கலை மேன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசு சிறப்பு நாணயம் வெளியிட முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைவதன் நினைவாக தபால் தலை ஒன்றை வெளியிட வேண்டும் மத்திய அரசின் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராசாவுக்கு கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார் என்றும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.