உத்தமர் காந்தி விருது - விண்ணபிக்க ஜூன் 15 கடைசி நாள்
Subscribe to Oneindia Tamil
நெல்லை : நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள் உத்தமர் காந்தி விருது பெற வரும் ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 2006-07ம் ஆண்டு முதல் சிறந்த ஊராட்சி தலைவர்களுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் சிறந்த 15 கிராம ஊராட்சிகளுக்கு இவ்விருது வழங்கப்படும். ஊராட்சியில் மிகசிறந்த பணிகள், வருமானத்தை பெருக்குதல், புதிய முயற்சிகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஊராட்சிகளுக்கு கேடயம், ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். ஊராட்சி தலைவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications