சபரிமலைக்கு ஜன.15-ம் தேதி வரை சிறப்பு ரயி்ல்கள்: ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் வரும் 15-ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா நேற்று முன்தினம் சபரிமலைக்கு வந்தார்.

ஐயப்பனை தரிசித்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

சபரிமலை ரயில்பாதைக்கு அடுத்த ரயில்வே பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். சபரிமலை சீசனை முன்னிட்டு இந்தியாவி்ன் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் வரும் 15-ம் தேதி வரை இயக்கப்படு்ம் என்றார்.

பின்னர் தேவசம்போர்டு சார்பில் அமைச்சர் முனியப்பாவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், சபரிமலை வரும் பக்தர்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து விடப்பட்டுள்ளது. இந்த பேருந்து தினமும் இரவு 9 மணிக்கு திருவனந்தபுரம் பழவங்காடு கணபதி கோவில் அருகில் இருந்து புறப்படும்.

இது கொட்டாரக்கரை, அடூர், பத்தனம்திட்டா வழியாக பம்பை செல்லும். அங்கிருந்து தினமும் காலை 11 மணி்க்கு திருவனந்தபுரத்திற்கு பேருந்து இயக்கப்படும். இதற்கான டிக்கெட் கட்டணம் ரூ.120 ஆகும். முன்பதிவு செய்ய ரூ.5 கூடுதலாக செலுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+