ஓணம்: சென்னை-கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்- இன்று முன்பதிவு துவக்கம்
சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஓணம் பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் (06081) இயக்கப்படுகிறது. இந்த ரயில் புதன்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொச்சிவேலிக்கு வியாழக்கிழமை காலை 7.10 மணிக்கு சென்றடையும்.
மறு மார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து சிறப்பு ரயில் (6082) 8-ம் தேதி மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலுக்கு 9-ம் தேதி காலை 6.15 மணிக்கு வந்தடையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.












Click it and Unblock the Notifications