16ல் துபாயில் 'நேற்று, இன்று, நாளை' இசை நிகழ்ச்சி: சங்கர் கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா பங்கேற்பு
ரிதம் இவென்ட்ஸ் துபாய் நடத்தும் நேற்று..இன்று..நாளை இசை நிகழ்ச்சி வரும் 16ம் தேதி துபாயில் உள்ள இந்தியன் ஹை ஸ்கூலின் ஷேக் ராஷித் அரங்கில் மாலை 7.30 மணி முதல் நடக்கிறது. இதில் தமிழகத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, பிரகாஷ் மற்றும் பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாபெரும் இசை இரவில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிதம் இவென்ட்ஸின் திருமதி சந்திரா ரவி மற்றும் திரு சபேசன் ஆகியோர் செய்கின்றனர்.
அரங்க வாயில் 4.30 மணிக்கு திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிக்கெட்டுகள் கிடைக்குமிடம்:
சங்கீதா ரெஸ்டாரன்ட், சிம்ரன்ஸ் ஆப்ப கடை, சிவ்ஸ்டார் பவன், பொன்னுசாமி ரெஸ்டாரன்ட்,
பெருமாள் பிளவர் ஷாப், கொழும்பு டயர்ஸ்.
மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் 050 6370472, 055 4553834 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.













Click it and Unblock the Notifications