ராஜஸ்தானில் 15 மயில்கள் திடீர் சாவு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை
Subscribe to Oneindia Tamil
பண்டி: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கருணா கிராமத்தில் 15 மயில்கள் திடீர் என்று இறந்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி என். விஜய் கூறியதாவது,
அத்தனை மயில்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மயில்கள் இறந்ததின் காரணம் தெரிய வரும்.
கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி ஹன்டோலி பகுதியில் 15 மயில்கள் இறந்து கிடந்தன. இது நடந்து 3 நாட்கள் கழித்து தல்வார் கிராமத்தில் 3 மயில்கள் இறந்தன. கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி அஜதே கிராமத்தில் 13 மயில்களும், மார்ச் 23-ம் தேதி அர்னிதா கிராமத்தில் 3-ம் இறநது கிடந்தன.
பறவைகளைப் பாதுகாக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications