கானல் நீரான காதல்…
Subscribe to Oneindia Tamil

கத்திரி வெயில்…
காணும் இடமெங்கும்
கானல் நீர்…
மதியநேரத்தில் ஒருநாள்
பாலைவனச் சோலையைப்போல
என்முன் வந்தாய்….
எதிர்பாராத சந்திப்பை
வானம் மழைபொழிந்து
கொண்டாடியது…
மழைநிற்கும் முன்பாகவே
சட்டென்று
நீ மறைந்து போனாய்….
அன்றுமுதல்
மழை பெய்யும் பொழுதெல்லாம்
என் மனம்
உன் வரவை எதிர்பார்க்கிறது.












Click it and Unblock the Notifications