ஷார்ஜாவில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டம் நடந்தது
துபாய்: துபாயில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைப்பெற்றது.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஐக்கிய அரபு அமீரகக் கிளை கடந்த 2004-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 6-ம் தேதி முன்னாள் மாணவர்கள் கூட்டம் ஷார்ஜா ரோலாவில் உள்ள அல் முபாரக் சென்டரில் அமைந்திருக்கும் ஏசியன் பேலஸ் ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
தியாராஜர் கல்லூரியின் தலைவர் உயர்திரு. கண்ணன் தியாகராஜன் அவர்களின் வாழ்த்து செய்தி மற்றும் கல்லூரியின் முதல்வர் உயர்திரு. அபய்குமார் அவர்களின் விரிவான இன்றைய நிலையும் வெள்ளித்திரையில் திரையிடபட்டது
டெக்டான் முதன்மை மேலாளர் திரு. இலக்குமனன், டிசிஇயுஏஇ தலைவர் திரு. கிரிஸ்டோபர், யு.ஏ.இ. தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களுடைய அனுபவத்தை மிக அழகாக தெரிவித்தார்கள். "நாம் ஏன் சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டும், ஏன் கொடுப்பவராக இருக்கக்கூடாது" என்று திரு. இலக்குமனன் கூறியது அனைவரையும் யோசிக்க வைத்தது.
டிசிஇயுஏஇ-ன் செயலாளர் திரு. சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 11:00 மணிவரை நீடித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த கால நினைவுகள் வெகு அழகாக பரிமாரப்பட்டது. கல்லுரியின் புகைப்படம் மற்றும் இதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திரையில் காண்பிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. கல்லூரி முன்னாள் மாணவரின் குழந்தைகள் மீனாக்ஷி தேனப்பனின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து யுஏஇ தமிழ்ச்சங்கத்தின் கலை நிகழ்ச்சியும், திருமதி. கங்கா ரமேஷ் நடனக்குழுவின் அற்புதமான நாட்டியமும் வந்தவர்களுடைய பாராட்டை பெற்றது.
திருமதி. கங்கா ரமேஷ், திருமதி. கீதா பாலா, திருமதி. கீதா கதிர், திருமதி. ஜமுனா ஷோபன், திரு.பாலாஜி, திரு.கிஷோர், திரு.வெங்கட், மாஸ்டர் ஸ்ரீனிவாசன் ஆகியோருடைய பாடல்கள் வெகு சிறப்பாக இருந்தது.
மாஸ்டர் ரோஷன், மாஸ்டர் நிஷாந்த் இருவரும் தங்களுடைய திறமையை கீபோர்டின் மூலமாக மக்களுக்கு தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இவ்விழாவை குருகிய காலத்தில் வெகுசிறப்பாக ஏற்பாடு செய்திருந்த திரு. சிவகுமார், திரு. அரவிந்த், திரு.ராஜா, திரு. மன்னவன், திரு. உதயகுமார், திரு. முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கும், அன்னைத்து உறுப்பினர்க்களுக்க்கும், நண்பர்களுக்கும் திரு. மன்னவன் நன்றி தெரிவித்தார்.
நன்றி உரையுடன் விழா நிறைவுற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் யாராவது இந்த சங்கத்தில் சேர விரும்பினால் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
திரு. சிவக்குமார் +971 50 8361629 , திரு சிவகுமார்-050 7260633 , திரு.ராஜா-0506942448, திரு.மன்னவன் 050-6501893. அல்லது tceuae @gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பலாம்.












Click it and Unblock the Notifications