டிசம்பர் 2ல் துபாய் ஈமான் அமைப்பின் 36வது ஆண்டு விழா
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் 36வது ஆண்டு விழா வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி அமீரகத்தின் 40வது தேசிய தினத்தன்று முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது.
துபாய் ஈமான் அமைப்பின் 36வது ஆண்டு விழா வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முஷ்ரிஃப் பூங்காவில் நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதாக அமைப்பி்ன் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. முஷ்ரிப்ஃ பூங்காவிற்கு செல்ல பேருந்துகள் தேரா சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.30 மணிக்கு புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் முதுவை ஹிதாயத்: 050 51 96 433, வி. களத்தூர் சாகுல் ஹமீது: 050 883 48 49 மற்றும் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன்: 055 800 79 09 ஆகியோரை தொடர்பு கொண்டு அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.