தீபாவளியன்று திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா துவக்கம்

இது குறித்து கோவில் இணை ஆணையர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது,
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலின் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வரும் 26ம் தேதி தீபாவளியன்று துவங்குகிறது. 31ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது.
சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளை பார்ப்பதற்காக 20 இடங்களில் பிளாஸ்மா டிவியும், அனைத்து விடுதிகளிலும் டிவியும் வைக்கப்படும். 31ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சிகளை காண 2 இடங்களில் எல்இடி டிவி வைக்கப்படும். அன்றைய நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் 26 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்படும்.
மேலும் குளியலறை, கழிப்பறை வசதிகள் போதிய அளவில் செய்யப்பட்டுள்ளன. சஷ்டி திருவிழாவில் 6 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வதால் கூடுதலாக 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கோவில் வளாகத்திலும், கடற்கரை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளிலும் 25 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் 10 இடங்களில் உயர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications