திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று விமரிசையாகத் தொடங்கியது.
நள்ளிரவு 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு .30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
இரண்டாம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் யாகசாலை பூஜை நடந்தது.
விழாலின் இறுதி நாளான 31ம் தேதி மாலை 4.35 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும்.
அதே போல திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட முருகன் கோவிலிலும் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications