துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 21-ம் தேதி ஜுமைரா கடற்கரை பூங்காவில் இவ்வருடத்தின் முதல் நிகழ்வாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பெரியவர்களும் தங்கள் வயதை மறந்து சிறுவர்களாகிவிட்டனர்.
கோ கோ, கயிறு இழுக்கும் போட்டி, கெட் த குரூப் எனப் பல்வேறு குழு விளையாட்டுக்கள் நடைபெற்றன. விலங்குகளைப் போன்று ஒலி எழுப்பி அதுபோன்றே நடந்து கொண்டு விளையாடியது அனைவரையும் கவர்ந்தது.
கயிறு இழுக்கும் போட்டியின்போது கயிறு அறுந்தது அதிர்ச்சியடைய வைத்தது. அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நாள் பொழுதை இன்ப மயமாகக் கழித்த பின்னர் மாலையில் அனைவரும் நீங்கா நினைவுடன் பிரியா விடைபெற்றனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்ப் பெண்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications