மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்
இதனை நாம் அறிந்து கொள்ளலாம். துர்க்கைக்கும், ஜேஷ்டா தேவிக்கும் கி. பி.773 அளவில் திருப்பரங்குன்றத்தில் நக்கன் கொற்றி என்றபெண்ணால் தனித்தனிக் கோயில்கள் எடுக்கப்பட்டன என்ற கல்வெட்டுச் செய்தியும் இங்கு குறிப்பிடத்தகுந்தது ஆகும். (11)
கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரை (கி.பி. 10, 11ம் நூற்றாண்டு வரை புலவர் தெ. இராசு) மக்களால் இத்தெய்வம் வழிபடப்பட்டு வந்தது.சிவாலயங்களில் பரிவார தேவதையாக எங்கு அமைக்க வேண்டும், ஊரில் தனியாக மூதேவி கோயில் எங்கு அமைக்க வேண்டும் எனத்தனியாக சிற்ப சாத்திர நூல்கள் விரிவாகக் கூறுகின்ற அளவுக்கு இத்தெய்வ வழிபாடு கி.பி.10, 11ம் நூற்றாண்டு வரை தமிழ்நாடெங்கும்பரவலாக இருந்தது. அதன் பின்னர் இத்தெய்வத்தின் நேரடி வழிபாடு பெருமளவு மறைந்தது. தற்போது ஒரு சில இடங்களில் மூதேவியின்கற்பிக்கப்பட்ட தன்மை தெரியாமல் வழிபடப்படுகிறது. (12)
சில இடங்களில் இத்தெய்வம் மூதேவியாக அறியப்படாமல் பல்வேறு உள்ளூர்ப் பெயர்களால் வழிபடப்படுகிறது. இன்னும் சிலஇடங்களில் இது உருமாற்றம் பெற்று கிராமத்துப் பந்தித் தெய்வப்பரிவாரங்களோடு ஒன்றாக ஆக்கப்பட்டு (ஐயனார் பரிவாரம் போன்றன)வழிபடப்படுகிறது. (13)
இவ்வாறு உருமாற்றம் பெற்ற ஒரு மூதேவி தெய்வம் மாகாளி சேஷ்டா தேவி என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்டம்முடிவைத்தானேந்தலில் வழிபடப்படுகிறது. (14 )
எனினும் துரதிருஷ்டத்திற்கும், தீட்டுக்கும், திருஷ்டிக்கும், சோம்பலுக்கும், அழகின்மைக்கும் குறியீடாகக் கற்பிக்கப்பட்ட இத்தெய்வத்தின்நேரடியான(எதிர்மறை) வழிபாடு தற்போது சமூக உளவியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது என்றே கூற வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே மிகப்பழைய மூதேவி சிற்பமாகக் கருதப்படுவது செங்கற்பட்டு அருகில் உள்ள வல்லம் ஊரில் காணப்படுகிறது. இங்குகி.பி. 7ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகேந்திரவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலில், இச்சிற்பம் காணப்படுகிறது.அங்கு நடுவில் சிவலிங்கமும் அதன் ஒரு புறம் பிள்ளையாரும் மறுபுறம் மூதேவியுமாக அச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. (15 )
மூதேவியைப் போலவே விநோதமான உருவமும், கிட்டத்தட்ட ஒத்த தன்மையும் உடைய தெய்வமே விக்கினஈசுவரன் என்ற கணபதிஆகும். (16 )
மூதேவிக்கும்கூட விக்கினபார்சாதா (vignaparshada) என்ற பெயர் உண்டு. (17)
மூதேவியின் வழிபாடு செல்வாக்கிழந்துவிட்ட இன்றைய நிலையில் கணபதி வழிபாடு பெருந்தெய்வ நெறிக்குள் (வைதீக நெறி) புகுந்து,மிகுந்த செல்வாக்குடன் திகழ்வதும், மூதேவி, கணபதி ஆகிய தெய்வங்களின் உறவும் தனி ஆய்வுக்குரியன. வைதீக எழுச்சிக்கு முன்வழிபடப்பட்ட பல வளமைத் தெய்வங்கள், பேரரசுகளின் உருவாக்கத்தின் போது வைதீகம் (அ) சமஸ்கிருத மரபுகளால் அழிக்கப்பட்டனஅல்லது தமதாக்கிக் கொள்ளப்பட்டன. இத்தகைய சமஸ்கிருத மயமாதலுக்கு ஆட்படாத தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட்டன. மூதேவியும்இவ்விதமே இழிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இத்தெய்வத்தின் சிலைகளில் முப்புரிநூல் காணப்படாததும், கச்சை இல்லாத திரண்ட மார்பகங்களும் இவள் சமஸ்கிருத மரபை ஏற்காததிராவிடத் தொல்குடிகளின் வளமைத் தெய்வம் என்பதைத் தெரிவிக்கின்றன. மேலும் இத்தெய்வம் வேதமரபுகளை ஏற்காததால் பெளத்தம்போன்ற அவைதீக மரபுக்குச் சென்றிருக்க வேண்டும். பின்னாளில் அரசுகளின் ஆதரவுடன் வைதீகம் நடத்திய மூர்க்கமான பண்பாட்டுத்தாக்குதலால் அவைதீக மரபுகள் செல்வாக்கிழந்த போது மூதேவி தெய்வமும் இழிவுக்குள்ளாகியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. (18 )
இத் தெய்வம் வைதீக மரபுகளை ஏற்காது என்ற லிங்கபுராணச் செய்தி போன்றன இதனை உறுதிப்படுத்துகின்றன. இன்றைய வாழ்வியலில்கழுதை என்பது வண்ணார் சாதியாரின் தொழிலோடு உறவுடைய உயிரினமாக மட்டுமே கருதப்படுகிறது. மேலும், வண்ணார்கள் தங்கள்தொழிற்களமான வெள்ளாவி அடுப்புக்கும் பொங்கல் வைக்கும் பழக்கம் உடையவர்கள். பழைய கற்சிலைகளில் மூதேவியின்உருவத்தோடு மாட்டு முகம் கொண்ட ஆண் உருவம் இருப்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. இதுவே வண்ணார்கள் வழிபடும் மாடனாகஇருக்கலாம். மேலும், முள்ளிக்குளத்தில் வண்ணார் சமூகப் பெண்கள் மத்தியில் மாடத்தி நல்லமாடத்தி என்ற பெயர்கள் இன்றும் பெருவழக்காக உள்ளன. மேலும் வண்ணார்கள் வழிபடும் மாடனை வண்ணார மாடன் எனப் பரவலாக அழைக்கின்றனர். இவ்வாறு வேறுசாதிப்பெயர்கள் மாடன் தெய்வத்துக்கு முன்னெட்டாக வருவது தென்தமிழகத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (வண்ணார்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வழிபடும் மாடனை வண்ணாரமாடன் எனச் சாதி முன்னொட்டுச் சொல்லி அழைக்க இக்காலத்தில்விரும்பவில்லை. மற்ற சாதியினரே அவ்வாறு அழைக்கின்றனர். மாடன்(அ)மாடசாமி என அழைப்பதையே வண்ணார்கள்விரும்புகின்றனர்.)
சமூக மோதல்களில் கொலையுண்டவர்களையே மாடன் என வழிபடுகின்றனர் என்பது நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்.சிவசுப்பிரமணியம் போன்றவர்களின் கருத்து ஆகும். (19)
மாடன்வகைத் தெய்வங்களே 31க்கும் மேற்பட்டு உள்ளன. இவற்றைச் சில பொதுவான காரணங்கள் கொண்டு வகைப்படுத்தலாம். 1.சுடலைமாடன் வில்லிசைக் கதையில் வருவன. 2.ஊரின் பெயரை வைத்து அழைக்கப்படுவன. 3.கொலை, விபத்து போன்ற காரணங்களால்சுடலை மாடனாக குறிக்கப்படுவன என்று மூன்று வகையாகப் பேரா. அ.க. பெருமாள் இத்தெய்வங்களை வரையறை செய்ய முயல்கிறார்.(20) மேற்குறிப்பிட்ட வகைப்பாட்டுக்குள் அடங்காத தெய்வமாக வண்ணார மாடனை இவ்வாய்வு கருதுகிறது. மேலும் வண்ணார்களேஆதி கடவுளான புலைமாடன் தொடங்கி (21) தளவாய்மாடன், சுடலைமாடன், சப்பாணிமாடன் போன்ற பல மாடன் தெய்வங்களைவழிபடுகின்றனர் (22) என்பதும் கள ஆய்வில் தெரியவந்தது.
எனவே, மாடன் வகைகளுள், வண்ணார்கள் வழிபடும் மாட்டுத்தலை கொண்ட வண்ணார மாடனே, மூதேவியுடன் மாட்டுத்தலையுடன்காணப்படும் அவள் மகன் மாந்திகனாக இருக்கலாம் என இந்த ஆய்வு கருதுகிறது. மேலும், வெள்ளாவிப் பொங்கல் பற்றிக் கூறும்வண்ணார் சமூகத்தவர் ஒருவர், வெள்ளாவிப் பொங்கல் என்பது மாடசாமிக்குத்தான். வண்ணாரமாடன் என்பதும் அதுதான், (23) எனக்குறிப்பிடுவது இக்கருதுகோளை உறுதிப்படுத்துகின்றது.
மேலும் வன்னிக்கோனேந்தல் அருகில் உள்ள வண்ணார்கள் வழிபடும் சுடலைமாடன் கோயில் வளாகத்தில் கழுதை வாகனம் கொண்டபெண் தெய்வத்தின் சிலை ஒன்று உள்ளது என்றும், (24) எப்போதுவென்றான் அருகே உள்ள அருகன்குளத்தில் வண்ணார மாடசாமிகோயிலில் விழாக்காலங்களில் கழுதை முகம் கொண்ட பெண் தெய்வம் வழிபடப்படுகிறது என்றும், (25) மேலச்சாத்தான்குளம் அருகில்விஜயரங்கபுரத்தில் அழுக்கு மூட்டை சுமந்தபடி ஒரு வண்ணாரமாடத்தியின் உருவம் ஓவியமாக உள்ளது என்றும் தகவலாளிகள்தெரிவிக்கின்றனர்.(26)
தமிழில் வண்ணம் என்றால் அழகு என்று பொருள். அழுக்கானவற்றை வண்ணமாக்குவது என்ற பொருளில்தான் சலவைத் தொழிலாளருக்குவண்ணார் என்று பெயர் வந்ததாக எச்.எ. ஸ்டூவார்ட் குறிப்பிடுகிறார். (27) புராணக்கதைகளின்படி பிரஜாபதியான தட்சன் சிவனைமதிக்காமல் நடத்திய யாகத்தைத் தடை செய்யும் போது பலரைக் கொன்றதால் அந்தப் பாவத்துக்கு கழுவாயாக வீரபத்திரனைச் சிவன்மனிதர்களின் உடைகளைச் சுத்தம் செய்யச் சொன்னார். தமிழ் வண்ணார்களின் பெயர்களில் வீரபத்திரன் என்ற பெயர் அதிகமாகக்காணப்படுவதனை இக்கதையுடன் தொடர்புபடுத்திக் காண வேண்டும்.
வண்ணார் சாதி அடித்தள சாதிகளில் ஒன்றாகவும், சேவைச்சாதியாகவும், கற்பிக்கப்பட்டுள்ளது. ஊர்மக்களின் அழுக்கு உடைகளை சுத்தம்செய்வதோடு அல்லாமல் தீட்டுக்குரியனவாக கருதப்படும் பூப்பெய்திய பெண்கள், பிள்ளைபெற்ற பெண்கள், இறந்தவர்கள் ஆகியோரின்உடைகளை சுத்தம் செய்வது போன்ற இவர்களின் மீதான வைதீக ஒடுக்குமுறை இவர்களைச் சில நிலைகளில் தீட்டுக்குரிய சாதியினராகஇழிவுபடுத்துகின்றது. இவர்களில் ஒரு பிரிவினர் தீண்டத்தகாத மக்கள் எனக் கற்பிக்கப்பட்டுள்ள அடித்தள மக்களின் துணிகளைச் சுத்தம்செய்பவர்களாக உள்ளனர். இவர்கள் புரத வண்ணார் என அழைக்கப்பட்டு, பார்க்கவும், அணுகவும் கூடாதவர்களாகக் கற்பிக்கப்பட்டுவண்ணார்களிலேயே கீழ்சாதியினராகவும் கருதப்பட்டு வந்தனர். (28)
சுருக்கமாக சொல்லப்போனால், வருணாச்சிரம சமூக அடுக்கில் இன்னமும் வைதீக மயமாகாத, சாதீய மதிப்பைப் பெறாத அடித்தளமக்களின் சாதிகளுள் வண்ணார் சாதியும் ஒன்று.
மழைச்சடங்குகளையும், குறிப்பாக முள்ளிக்குளம் மழைச்செம்புச் சடங்கையும், பொதுவாக வண்ணார் சாதியையும் குறிப்பாக இம்மழைச்செம்புச் சடங்கில் அவர்களின் பங்கையும், மூதேவி என்கிற வளமைத் தெய்வத்தின் தன்மைகளையும் தொகுத்து ஆராய்கின்ற போதுவண்ணார் சாதிக்கும், மூதேவி எனும் தெய்வத்துக்கும் கற்பிக்கப்பட்ட ஒரு உறவுநிலை இருப்பதாகத் தோன்றுகிறது. வேறுசில ஆதாரங்களும்இக்கருத்தை அரண் செய்கின்றன.
அழகின்மையின் குறியீடாகவும், புனிதமற்றதாகவும், கண்ணேறு கழிப்புக்குரிய உருவமாகவும், சிலநிலைகளில் இழவுக்குறிப்பாகவும், சிலஇடங்களில் மழை வேண்டிச் செய்யப்படும் சடங்கில் பயன்படுத்தப்படுவதுமாகிய கழுதை, மூதேவியின் வாகனம் என்பதும் தொழில்அடிப்படையில் அது வண்ணார் சமூகத்துடன் மட்டுமே பெருமளவு தொடர்புடையது என்பதும் குறிக்கத்தக்கன. இவ்வாய்வாளரின் களஆய்வின் போது வண்ணார் சமூகத்தவர் சிலர் கழுதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, கழுதை ஒரு வாகனம் என்றனர். (29) மேலும், தேவர்சமூகப் பெரியவர் ஒருவரும், கழுதை ஒரு வாகனம் எனவே அதை அடிக்கக் கூடாது என்றார்.(30) ஆனால் அது எந்தத் தெய்வத்தின்வாகனம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. வாகனம் என்பது பொது நிலையில் ஊர்திகளையும், சமயநிலையில் தெய்வங்கள்ஏறிவரும் ஊர்திகளையும் குறிக்கப்பயன்படும் சொல், என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மேலும், கள ஆய்வின்போது வண்ணார் சமூகப் பெரியவர் ஒருவர் கழுதையின் அதிர்ஷ்டச் சிறப்புகளை விவரிக்கும்போது, அவ(கழுதை) எதுக்க வந்தாலே சீதேவிதான் என்றார்.(31) துரதிருஷ்டத்துக்கு உரியவளான மூதேவியின் வாகனமான கழுதையை இங்குபெண்ணாகப் பார்ப்பதும், எதிர்கலாச்சார அடிப்படையில் சீதேவியாகப் பார்ப்பதும் குறிக்கத்தக்கன.
குடும்ப நிகழ்வுகளின் போதும், உரையாடலின் போதும் கழுதை கத்தினால் நல்ல சகுனம் என்பது எல்லா சாதி மக்களிடமும் காணப்படும்நம்பிக்கையாகும். மேலும், வண்ணார மாடன் கோயில் குறித்துப் பிறசாதி மக்களிடையே அச்ச உணர்வு நிலவுவதைக் கள ஆய்வில் பார்க்கமுடிந்தது. சில இடங்களில் (வண்ணார) மாடனின் முன்னெட்டாக வரும் நல்லமாடன் என்ற பெயரையும் இங்கு எதிர்கலாச்சாரஅடிப்படையில் பார்க்க இயலும்.
மூதேவியின் கொடியான காக்கை அபிதான சிந்தாமணியாலும், (32) பொது வழக்காலும் துப்புரவுப் பணியோடு தொடர்புபடுத்தப்பட்டுஊர்த்தோட்டி என அழைக்கப்படுகிறது. மூதேவியின் பல பெயர்களுள் ஏகவேணி என்பதும் ஒன்று. ஏகவேணி என்றால் ஒற்றைச்சடையாள் என்று பொருள். வண்ணார்களுக்கு ஏகாலிகள் என்றே பெயர் உண்டு. ஒற்றைக்கால் என்பது இதன் பொருள். ஒத்தச்சடை,இரட்டைச்சடை என்பதைப் பொது வழக்காக ஒத்தைக்கால், இரட்டைக்கால் என்று வழங்குவதை நோக்க வேண்டும்.
வண்ணார்கள் தங்களின் துணிகள் வெள்ளாவியில் எரிந்து போகாமல் இருக்கவும், மழை பெய்து வளம் பெருகவும் வெள்ளாவி அடுப்புக்குமுன் வெள்ளாவிப் பொங்கல் இடும் வழக்கம் கொண்டவர்கள்.(33) மூதேவிக்கு ஜலமாயா என்ற பெயர் உண்டு என்பதும், மூதேவிவாழிடங்களில் ஆடை துவைத்த நீரும் ஒன்று என்பதும் நோக்கத்தக்கது. கள ஆய்வில், வண்ணார் சமூகப் பெரியவர் ஒருவர்வெள்ளாவிப்பொங்கல் என்பது மாடசாமிக்குத்தான், வண்ணாரமாடன் என்பதும் அந்த மாடசாமிதான், என்றது மீளவும் இங்கு நினைக்கத்தக்கது. இதன் தொடர்பில் வெள்ளாவிப் பொங்கலும் தனி ஆய்வுக்குரியது.
மழைச் சடங்குகளில் ஒன்றான கொடும்பாவி கட்டி எரித்தலில், இதன் தொடர்பில் ஒரு புதிய ஐயம் எழுந்துள்ளது. கொடும்பாவி என்பதுயாரைக் குறிக்கின்றது? என்பதே அது.
கொடும்பாவி சாகாளோ
கோடிமழை பெய்யாதோ!(34)
கொடும்பாவி சண்டாளி
ஒரு மழை பெய்யாதோ! (35)
என்று வருகிற கொடும்பாவி எரிப்புப் பாடல்களின் மூலம் கொடும்பாவியைப் பெண்ணாகவே பார்க்கின்றனர் என்பதும்,
கொடும்பாவி சாகாளோ
கோடிமழை பெய்யாதோ!
நாசகாரி சாகாளோ
நல்ல மழை பெய்யாதோ!
மூதேவி சாகாளோ
முழு வெள்ளம் பாயாதோ!
என்ற மழைச் சடங்குப் பாட்டின் (36) மூலம் இது போன்ற பாடல்களில் பெண்ணாகச் சுட்டப்படுபவள் மூதேவியே என்பதும்தெரியவருகிறது.
கோவில்பட்டி அருகே வானரமுட்டி எனும் ஊரில் கொடும்பாவியைக் கட்டி, விளக்குமாற்றால் அடித்து இழுத்து, மயானத்தில் வைத்துஎரித்துப் பின்னர் அதோடு தொடர்புடைய சடங்குப் பொருட்கள் மற்றும் துணி முதலியவற்றை வண்ணாருக்குக் கொடுக்கின்றனர் என்பதுதகவலாளிகள் மூலம் தெரிய வருகிறது. (37)
நெல்லை ராமையன்பட்டி அருகேயுள்ள சேதுராயன் புதூரில் நடைபெறும் கொடும்பாவி எரிப்பு மழைச்சடங்கில். கொடும்பாவியைஇழுத்து வரும்போது அதோடு கழுதை ஒன்றையும் ஊர்வலமாக இழுத்துவருவர். ஊர்ப் பொது இடத்தில் கொடும்பாவியை எரித்த பின்னர்,கழுதையின் காதில் தேங்காய்ச் சிரட்டையைக் கவ்வக்கொடுப்பர். (தேங்காய் அப்புறப்படுத்தப்பட்ட கனத்த சிரட்டையில் சிறிய பிளவைஏற்படுத்துவர். பிறகு அந்த கீறல் விழுந்த சிரட்டையை கழுதையின் காதில் கிளிப் போன்று பற்றிக்கொள்ளச்(கவ்விக் கொள்ள) செய்வர்.விசையுடன் பற்றிக்கொள்ளும் சிரட்டை, காதில் வலியை ஏற்படுத்துவதால் கழுதை கத்திக்கொண்டே ஓடும். இதனையே சிரட்டையைகவ்வக் கொடுத்தல் என்கின்றனர்.) அதனால் அது கத்திக்கொண்டே ஓடும்.
இவ்வூரில் கணிசமான மக்கள் தலித்துக்கள். இவர்களுக்குச் சேவைச் சாதியினராக இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளின்வண்ணார்களான தீண்டா வண்ணார் எனப்படும் புரத வண்ணார் ஆவர். கொடும்பாவி எரிப்பு முடிந்ததும் ஊர் மக்கள் பகிர்ந்து கொண்டதுபோக மீதமுள்ள ஊர்ச் சோற்றை இப்புரத வண்ணார்களே எடுத்துக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(38)
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications