ஷீரடி சாய்பாபா சிலையில் இருந்து தேன் வழிந்ததாக பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் ஷீரடி சாய்பாபா சிலையின் கண்களில் இருந்து தேன் வழிவதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பிள்ளையார் கோவில் வீதியில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆத்ம சாயி ஷீரடி சாய்பாபா பஜனை மண்டலி என்ற பெயரும் உண்டு.
கடந்த நவம்பர் மாதம், இங்குள்ள ஷீரடி சாய்பாபா சிலையில் இருந்து விபூதி கொட்டியதாக, பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்றுப ஷீரடி சாய்பாபா சிலையின் கண்களில்,தேன் வழிவதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட அப் பகுதியைச் சேர்ந்த பக்தர்களும், பொது மக்களும் அங்கு திரண்டு சென்று பயபக்யோடு சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications