தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் படிக்க விண்ணப்பம்
மதுரை: தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பட்டயப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல் லாங்குழல், நாதசுரம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங், கிராமியக்கலை, பரதநாட் டியம் (பெண்கள்) ஆகியவையும், 2 ஆண்டு பட்டயப்படிப்புகளான மேல்நிலை இசைக்கலைமணி, நட்டு வாங்கலைமணி ஆகிய படிப்புகளுக்கும், ஓராண்டு பட்டயப்படிப்பான இசை ஆசிரியர் பயிற்சிக்கும், இந்திய இசை சான்றிதழ் படிப்பு குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம் (இரண்டு வருடம்) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் பெற ரூ 5 க்கான இந்திய அஞ்சல் ஆணையினையும், விண்ணப்பத்தினை பதிவு செய்ய கட்டணம் ரூ 1 க்கான இந்திய அஞ்சல் ஆணையினையும் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகம் மற்றும் சென்னை, தி.நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாலை நேரக் கல்லூரி மையங்களாக இயங்கும்.
பயிற்சி குறித்த மேலும் விவரங்களுக்கு, முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சென்னை - 28 என்ற முகவரியிலும், 044-2493721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications