ஏப்ரல் 15ம் தேதியை திருநங்கையர் தினமாக கடைப்பிடிக்க கருணாநிதி உத்தரவு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்திலுள்ள அரவாணிகளுக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பை அளிப்பதற்குத் தேவையான திட்டங்களை வகுத்துச் சிறப்பான முறையில் செயல்படுத்தவதற்காக அரவாணிகள் நல வாரியம் முதல்வர் கருணாநிதியால், 15.4.2008 அன்று ஏற்படுத்தப்பட்டது.
அரவாணிகளைச் சிறப்பிக்கும் வகையில், இந்த ஆணை வெளியிடப்பட்ட ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாளை திருநங்கையர் தினம் என அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்தது.
அக்கோரிக்கையினை மிகுந்த பரிவோடு பரிசீலனை செய்து, ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாள் திருநங்கையர் தினம் ஆகக் கடைப்பிடிக்கப்படுமென முதல்வர் கருணாநிதி இன்று (1.3.2011) ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications