எப்போது பொய் சொல்லலாம்?
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பொய் பேசியிருப்பார். பொய்யை மட்டுமே பேசுபவர்களை நாம் கணக்கில் கொள்ள வேண்டாம். மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். பொய் பேசவே கூடாது என்கின்றன தர்ம சாஸ்திரங்கள். ஆனால் சில நேரங்களில் பொய் பேசினால் தவறில்லை என்கின்றன.
இதைத்தான் வள்ளுவரும்,
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
என்கிறார். அதாவது, குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்கிறார் அவர்.
உயிர் காக்கும் தருணங்கள்
பெண்ணின் கற்பை காக்க வேண்டிய தருணத்திலும், தன்னுடைய உயிர் மற்றும் பிறருடைய உயிர் காக்கும் சமயங்களிலும் பொய் சொல்லாம் என்கிறது தர்ம சாஸ்திரம். பொருளைக்காக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், பொய் சொல்லலாம் என்கின்றன நீதி நூல்கள்.
பொய்க்குப் பரிகாரம்
மீனுக்குப் பொரியும், பசுவுக்குப் புல்லும், ஏழைக்கு ஆடையும், தானமாக கொடுத்தால் பொய் கூறியதற்கான பாவம் நீங்கிவிடும்.
எப்போதும் மெய் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதில்லை. உண்மையைக் காப்பாற்றவும், மற்றவர்கள் உயிரைக் காக்கும் என்று தெரிந்தால் அப்போதும் பொய் செல்லலாம்.












Click it and Unblock the Notifications