1,500 அடி சச்சின் ஓவியம்: பிறந்தநாள் பரிசு
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: சச்சின் டெண்டுலகரின் பிறந்தநாளையொட்டி உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் மாஸ்டர் பிளாஸ்டரின் ஆயிரத்து 500 அடி நீள ஓவியம் ஒன்றை வரையவிருக்கிறார். அதுவும் 38 மணி நேரம் ஓய்வின்றி வரைந்து முடிக்கவிருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 38வது பிறந்தநாளை வரும் 24-ம் தேதி கொண்டாடுகிறார். அவருக்கு பரிசளிக்கத் தான் இந்த ஓவியம்.
இது குறி்த்து அலகாபாத்தைச் சேர்ந்த பிரபல மண் சிற்பக் கலைஞர் ராஜ் கபூர் சித்தேரா(26) கூறியதாவது,
நான் வரும் 22-ம் தேதி மாலை 4 மணிக்கு வரையத் துவங்கி சச்சினின் பிறந்தநாளான 24-ம் தேதி அன்று ஓவியத்தை முடிப்பேன்.
நான் வழக்கமாக மண் சிற்பங்கள் செய்வதையே விரும்பினாலும், இந்த முறை சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என்று வரையவிருக்கிறேன். ஓவியத்தின் உயரத்தை கருத்தில் கொண்டு தான் சிற்பம் செய்யாமல் வரைகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications