சித்திரை திருவிழா: பாபநாசம் கோயிலில் நாளை தேரோட்டம்
சிங்கை: பநாசம் கோயிலில் சித்திரை திருவிழாவின் 9-வது நாளான நாளை(13-ம் தேதி) முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
பாபநாசம் பாபநாச சாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமி அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம், வாகன பவனி உள்ளிட்டவை நடந்து வருகின்றன. பல்வேறு சமுதாய மண்டகப்படி சார்பில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. திருவிழாவின் 9-ம் நாளான நாளை காலை 9 மணிக்கு சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து 10.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10-ம் நாளான வரும் 14-ம் தேதி பூம்பல்லாக்கு வைபவமும், 1 மணிக்கு சித்திரை விசு தீர்த்தவாரி, இரவு தெப்பஉற்சவம் ஆகியவை நடக்கிறது.
11-ம் நாளான வரும் 15-ம் தேதி காலை 8 மணிக்கு சுவாமி மண்டபத்துக்கு எழுந்தருளலும், பகல் 12 மணிக்கு 16 வகை அபிஷேகம், 1 மணிக்கு அன்னபாவிப்பு, இரவு 8 மணிக்கு ரிஷிப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.












Click it and Unblock the Notifications