திருச்செந்தூர் கோயிலில் சித்திரை விசு: பக்தர்கள் புனித நீராடல்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சித்திரை விசு திருவிழா நடைபெற்றது.
இன்று சித்திரை பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசுவரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மேலவாசலில் உள்ள பிள்ளையாருக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதன்பிறகு 10.30 மணிக்கு சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
உச்சிகால பூஜைக்குப் பிறகு தங்க சப்பரத்தில் ஜெயந்தி நாதர் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்தார். மாலையில் ஜெயந்தி நாதர் தங்க தேர் இழுக்கப்படுகிறது. சித்திரை விசுவை முன்னிட்டு திருச்செந்தூரில் இன்று ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications