உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழக புதிய தலைவராக டாக்டர் எஸ்.ராஜசேகரன் தேர்வு

கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குநராக இருப்பவர் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணரான எஸ். ராஜசேகரன்.
இவர் உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
கனடாவை தாயகமாகக் கொண்டு துவக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி கழகம், உலகில் நடக்கும் தண்டு வட ஆய்வு, ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.
முதுகுத் தண்டுவட ஜவ்வு தேய்மானத்தை சரி செய்வது குறித்து எஸ். ராஜ சேகரன் மேற்கொண்ட ஆய்வில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து இந்த அமைப்பில் உறுப்பினரானார்.
அவரது அயராத ஆராய்ச்சியின் வெற்றியின் காரணமாக தற்போது அந்த அமைப்பின் தலைவர் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். ஸ்வீடனில் நடநந்த நிகழ்ச்சியில், உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக நேற்று பொறுப்பேற்றார்.
இதற்கு முன்பாக, அமெரிக்காவின் ருஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹவார்ட் இப் பொறுப்பை வகித்து வந்தார்.
உலக அளவில் மருத்துவத்துறையின் மிக முக்கியமான இப் பதவிக்கு ஒரு தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.
ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு உலக தண்டு வட ஆராய்ச்சிக் கழகத்தின் விருதையும் டாக்டர் ராஜசேகரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications