துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய மாதாந்திர சந்திப்பு நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சிக்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை தாங்கினார். நிறுவனப் புரவலர் ஏ.லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் மு. அ. முஹம்மது உசேன் சிறப்பு சொற்பொழிவாற்றினார். அவர் தனது உரையில் பாலைவனத்தில் ஒரு சோலையாக தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நடத்தி வரும் இவ்விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதைப் பாராட்டினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
குறள் சொல்லும் நேரம், நடனம், வினாடி வினா, நகைச்சுவை நேரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விருதை செய்யது ஹுசைன் கல்வியின் அவசியம் குறித்த பாடல் பாடினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். மீரா கிரிவாசன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
அல் ரவாபி, அலி கஃபே உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழ்ச்சிக்கான அனுசரணை வழங்கியிருந்தன.













Click it and Unblock the Notifications