For Quick Alerts
For Daily Alerts
Just In
ஒரு ஆண்மகன் போதும்!
அடுத்த வீட்டு தோழிக்கு
திருமணம் என்றால்
துணைப் பெண்ணாய் நிற்க
ஆள் தேடும் கூட்டம்…
எப்போ சோறு போடுவே என
பல நாள் பட்டினி போல
பரிகாசம் செய்யும்
பக்கத்து வீடுகள்…
மனதின் காயங்களை
மறைத்துக் கொண்டு
வளைய வந்தாலும்
கீறிப்பார்க்கும் உறவுப் பட்டாளம்…
கழுகுக் கண்களில் இருந்து
காத்துக் கொள்ள
நெருப்பாய் இருந்தாலும்
குளிர்காயத் துடிக்கும்
கயவர் கூட்டம்…
பருந்துப் பார்வைக்குத் தப்பிய
கோழிக்குஞ்சுகளாய்
காத்திருக்கும்
கன்னிகளை காப்பாற்ற….
அவதார நாயகன்
வேண்டாம் !
ஆண்மகன் போதும்.
Comments
English summary
Marriage is very important to human life. But, unfortunately everybody could not get that opportunities. This poem is telling about feelings of aged girl.
Story first published: Monday, April 25, 2011, 10:35 [IST]