2011ல் போலியோ இல்லாத பீகார்: மாநில அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: 2011ல் பீகாரில் இருந்து போலியோவை முற்றிலுமாக ஒழிக்க பீகார் அரசு திட்டமிட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே தெரிவித்தார்.
இது குறித்து சௌபே இன்று நிருபர்களிடம் கூறியதாவது,
நாங்கள் 2011-ம் ஆண்டில் போலியோவை பீகார் மாநிலத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 2009-ம் ஆண்டு மாநிலத்தில் மொத்தம் 117 பேர் போலியோவால் தாக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த 9 ஆகியுள்ளது. போலியோ ஒழிப்பு திட்டத்தை கண்காணிக்குமாறு மாவட்ட நீதிபதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications