கத்தாரில் நடந்த பிரமாண்ட கலை நிகழ்ச்சி: சினேகா, எஸ்.வீ. சேகர் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Grand culturals held in Qatar
தோஹா: கத்தார் தமிழ் சங்கத்தின் சார்பில் இது வரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தோஹா எம்.ஈ.எஸ். பள்ளி அரங்கில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் புன்னகை இளவரசி சினேகா, நகைச்சுவை நாடகப் புகழ் கலைமாமணி எஸ்.வீ. சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கிரேஸ் கருணாஸ் இசை நிகழ்ச்சி, மானாட மயிலாட சாண்டி, ஸ்வேதா, கிரிஷ், சுனிதா நடனம் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் அஜீஷ், சாய் சரண், பூஜா ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.

சாய் சரண் பாடிய பலே பாண்டியா படத்தில் வரும் 'மாமா, மாப்ளே' பாட்டு சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும் குலுங்க குலுஙகச் சிரிக்க வைத்தது. அஜீஷின் மாயக் குரலில் கோவா படத்தின் 'இது வரை' பாட்டு அனைவரின் மனதை ஈர்த்தது என்றால், கிரேஸ் கருணாசின் பருத்தி வீரன் குத்துப் பாட்டு ரசிகர்கள் பலரை இருக்கையில் இருந்து எழுந்து ஆட்டம் போட வைத்தது.

கிரேஸ் குழுவின் லக்ஷ்மி செல்வம், தனது இனிய குரலில் பாடியது மட்டுமில்லாமல் மயில் போன்று ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதை எஸ்.வீ. சேகரும் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

பிரசன்னா சினேகாவைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தும், கத்தார் வந்த சினேகா தனது வருங்கால கணவரின் பெயரைக் கூட சொல்லவில்லை. ஆனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.வீ. சேகரின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார்.

எஸ்.வீ. சேகரின் பேச்சில் பார்வையாளர்கள் தங்களை மறந்து சிரித்தனர். 'தங்கபாலு ஒரு விஷயத்தை, அதுவும் மகாத்மா காந்தி சொன்னதை, கரெக்டா பண்ணினார். விடுதலை வாங்கின உடனே 'நாம உடனடியாய் இந்த காங்கிரஸ் கட்சியை கலைச்சிடனும்' னு காந்தி சொன்னார். அதை இத்தனை வருஷத்துக்கு அப்பறம் தங்கபாலு தமிழ் நாட்டில் நிறைவேற்றியுள்ளார் என்றதும் அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.

கவுண்டமணி, செந்திலை தமிழ் நாட்டின் லாரல்-ஹார்டி என்று புகழ்ந்த எஸ்.வீ.சேகர், வடிவேலு போன்ற அருமையான, அனைத்து தரப்பினரையும் ஈர்த்த காமெடியனும் இல்லை என்று குறிப்பிட்டார். 'வடிவேலுவோட காமெடியை அடிச்சுக்க முடியாது. அவரோட அரசியல் காமெடி தான் கொஞ்சம் சீரியஸா போச்சு' என்று பொது ஜனத்தின் உணர்வுகளை பிரதிபலித்தார். பார்வையாளர் ஒருவர் நகைச்சுவை நாயகன் வால் பையனை பற்றி கேள்வி கேட்க, எஸ்.வீ.சேகர், "நாடகத்துல இருக்கற வால் பையனுக்கு வால் இன்னும் நீண்டுக்கிட்டுதான் இருக்கு, அரசியல் வால் பையனுக்கு தான் ஒட்ட நறுக்கிட்டாங்க" என்று தன்னையும் சாடிக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த தோஹா வங்கிக் குழும முதன்மை செயல் அதிகாரி திரு. ஆர். சீதாராமன், தானும் எஸ்.வீ சேகரும் பால்ய நண்பர்கள் என்றும், ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதையும் தனது உரையில் குறிப்பிட்டார். நிகச்சி நடத்த உதவிய பிற முக்கிய நிறுவனமான ஆச்சி மசாலா தலைவர் திரு. ஐசக் இந்த நிகழ்ச்சியின் மூலமாக கத்தாரில் ஆச்சி மசாலா நிறுவனத் தயாரிப்புகளை அறிமுகப்படுதுவதாய் அறிவித்தார். ஆர். சீத்தாராமனின் தாயார் 'ஆச்சி' யாக அதை பெற்றுக் கொண்டார். தோஹா எக்ஸ்ப்ளோரா நிறுவனமும் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்று.

சரவண பவன் உணவகத்தின் சிறப்பு விற்பனைக் கூடம், காவலர் பாதுகாப்பு, சிறந்த ஒலி-ஒளி அமைப்பு, பெருந்திரையில் ஒளிபரப்பு என்று நிகழ்ச்சி முழுமையாய் களை கட்டியது. கத்தார் தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. சார்லஸ், துணைத் தலைவர் திரு. இஸ்மாயில் நாகூர், பொதுச் செயலாளர் திரு. ஆர். ஸ்ரீனிவாசன் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் பல வாரங்கள் பம்பரமாய் சுழன்று நிகழ்ச்சியை திறம்பட நடத்தி முடித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+