திருப்பூர் சாய ஆலை தொழிலாளர்களுக்காக கஞ்சித் தொட்டி திறப்பு : 50 ஆயிரம் வேலையிழப்பு
திருப்பூர் : திருப்பூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் சான்று பெறாத சாய ஆலைகள் மூடப்பட்ட காரணத்தால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்காக, பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில், கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் சான்று பெறாத சாய, சலவை ஆலைகள் மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து சாய ஆலைகளில் பணியாற்றிய 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென தொழில் துறையினரும், தொழிற்சங்கங்களும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக சாய ஆலைகள் இயங்கவில்லை. இதனால் வேலையிழந்து வாடும் சாய தொழிலாளர்களுக்கு பி.எம்.எஸ். தொழிற் சங்கம் சார்பில் வீரபாண்டி பிரிவு அருகே கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் கஞ்சித்தொட்டியை திறந்து வைத்து தொழிலாளர்களுக்கு கஞ்சி வழங்கினார்.












Click it and Unblock the Notifications