உனைக் கண்ட நாள் முதல்...
Subscribe to Oneindia Tamil
-மயூரா அகிலன்
என் இதயத் திருடனே !
உனை முதலில் பார்த்ததும்
மூச்சுவிட மறந்தேன்…
உன் பேச்சைக் கேட்டதும்
சொற்களை மறந்தேன்…
உன் சிரிப்பின் அழகில்
சிந்திக்க மறந்தேன்…
நீ பார்த்த பார்வையில்
நான் பைத்தியமானேன்…
எனைத் திருடிச் சென்றவனே !
எங்கிருக்கிறாய் நீ ?
மின்னலாய் வந்து
என்னுள் இடியாய் இறங்கினாய்…
மாயமாய் மறைந்து போனதால்
என் கண்கள்
மழையை பொழிகிறதே!












Click it and Unblock the Notifications