ஊருக்கு போன மகாராஜாக்கள்
Subscribe to Oneindia Tamil
- மயூரா அகிலன்
பூக்கள் இல்லாத
நந்தவனம் போல்
வெறுமையாய் இருக்கிறது வீடு…
பூபாளம் இசைத்த வீட்டில்
வெறும் அமைதி கீதம்…
இளவேனிற்காலமாய்
இனித்த வாழ்க்கையில்
ஏனிந்த இலையுதிர்காலம்?.
மழலை மகாராஜாக்கள்
ஊருக்கு சென்றிருப்பதால்
கலவரமும் கும்மாளமுமாய்
இருந்த வீட்டில்
அமைதியின் ராஜாங்கம்…
இது தற்காலிகம்தான்
என்றாலும்
தனிமை கொல்கிறது.












Click it and Unblock the Notifications