துபாயில் பொருளாதார நலிவுக்குள்ளாகும் இந்தியக் குடும்பத்தினருக்கு உதவும் இந்திய சமூக நல மையம்

11.10.2011 செவ்வாய்க்கிழமை இந்திய கன்சுலேட்டில் நடத்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா அமீரகத்தில் அல்லறும் இந்தியப் பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் புதிய நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்திய சமூக நல மையத்தின் கன்வீனர் தமிழகத்தைச் சேர்ந்த கே. குமார் கூறுகையில், சமீப காலங்களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தின் காரணமாக ஒரு சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் நிகழ்வதே இத்திட்டம் துவங்க காரணமாக அமைந்துள்ளது.
பள்ளிக் கட்டணங்களை செலுத்த இயலாத இந்தியர்கள் குறித்த விபரங்கள் சேகரித்து அவர்களது கல்விக்கும், பெண்களது பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கும் உதவிட முதல் கட்டமாக இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது.
இதற்கு ஊடகங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்பட்டது. துபாய் இந்தியா கிளப்பின் சேர்மனும், அமீரகத்தின் இந்திய இளம் தொழிலதிபருமான சித்தார்த் பாலச்சந்திரன் இத்திட்டத்திற்கு திர்ஹம் 500,000 நிதியாக அளித்தார். இதே போல் தொழிலதிபர்கள் இத்திட்டம் சிறப்புற தங்களது பொருளாதார உதவிகளை அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
முதலாவதாக நிதி வழங்கிய சித்தார்த் பாலச்சந்திரனுக்கு இந்திய கன்சல் ஜெனரல் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications