குவைத்தில் தமிழோசையின் 5-ம் ஆண்டு விழா: ஐம்பெரும் காப்பியக் கலைவிழா
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத் தமிழோசையின் ஐந்தாம் ஆண்டு விழாவினையொட்டி 'ஐம்பெரும் காப்பியக் கலை விழா' கடந்த 8-ம் தேதி கார்மல் பள்ளியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழோசை சங்க தலைவர் யு.கே. சிவகுமார் தலைமை தாங்கினார். குவைத் டிவிஎஸ் கார்கோ மேலாளர் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். குவைத்திற்கான இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை லயோலா கல்லூரியின் முனைவர் பி. சரோன், களவாணி திரைப்பட புகழ் விமல், இயக்குநர் மற்றும் நடிகர் தம்பி ராமையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பரதாஞ்சலி, இசை நிகழ்ச்சி, ஆண்டு மலர் வெளியீடு, நூல்கள் வெளியீடு. கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விட்டுக்கட்டி மஸ்தான் நன்றியுரை நிகழ்த்தினார். செயலாளர் அபுதாஹிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.













Click it and Unblock the Notifications