குவைத்தில் வாரந்தோறும் வசந்தம் நிகழ்ச்சி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு
குவைத்: குவைத் கைத்தான் பகுதியில் உள்ள மிக்தாத் பின் அம்ரு (ரழி) பள்ளிவாசலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு 'வாரந்தோறும் வசந்தம்' நிகழ்ச்சியை குவைத் தமி்ழ் இஸ்லாமி்யச் சங்கம் நடத்தி வருகிறது.
குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக "அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்" கொள்கை அடிப்படையில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி முதல் குவைத், ஃகைத்தான் பகுதியில் அமைந்துள்ள மிக்தாத் பின் அம்ரு (ரழி) பள்ளிவாசலில் வாரந்தோறும் தமிழில் ஜும்ஆ குத்பாப் பேருரை நடத்தி வருகிறது.
வாரந்தோறும் குத்பாவுக்கு வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் வரக்கூடிய அனைவரும் மார்க்கத்தின் செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்வதற்காக ஜும்ஆ குத்பாப் பேருரையுடன் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் அச்சங்கம் நடத்தி வருகிறது.
வெள்ளிக்கிழமைகளின் பொன்னான நேரங்களை சமுதாய மக்கள் பயனடையும் முறையில் செலவழிக்க அச்சங்கம் பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகின்றது.
அந்த அடிப்படையில் வாரந்தோறும் ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு "வாரந்தோறும் வசந்தம்" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒரு கேள்வி கேட்கப்படும். அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைக்குள் சரியான பதிலை நேரடியாகவோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். வாரந்தோறும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்(நபிமொழி)கள் உள்ளே புதைந்து கிடைக்கும் துஆக்கள், திக்ருகள், வரலாற்று நாயகர்கள் போன்றவற்றை பொதுமக்கள் தாங்களாகவே தோண்டியெடுக்கும் அற்புத நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.
கடந்த 30-ம் தேதி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி,
"குழந்தை பாக்கியம் கிடைக்க எந்த துஆவை / பிரார்த்தனையை ஓத வேண்டும் என்று திருக்குர்ஆன் குறிப்பிடும் வசனம் எது? அதை ஓதிய இறைத்தூதர் யார்?
7.10.2011 அன்று வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட பதில்:
ரப்பி லா தர்னீ ஃபர்தன் வ அன்த்த் ஃஹைருல் வாரிஸீன் (அல்குர்ஆன் - அத்தியாயம்: அல் அன்பியா(21) - வசனம்: 89)
பொருள்: என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசாகக் கூடியவர்களில் மிக்க மேலானவன்.
இந்த துஆவை ஓதிய இறைத்தூதர்: ஹழ்ரத் ஜகரிய்யா(அலை) அவர்கள்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க:
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: [email protected] / [email protected]
யாஹு குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்: www.k-tic.com












Click it and Unblock the Notifications